Thursday, May 27, 2010

மல்லிகை

தலைவாழை இலையில்
தண்ணீர் தெளித்து...

அழகாய் கோர்த்திருந்த
மல்லிகைச்சரத்தை
மடித்துத் தருவதைப் பார்க்கும்போது
மனைவிக்கு மல்லிகை
வாங்க வேண்டும்
என்ற ஆசை எழுகிறது.

அதே ஒரு முழம்
மல்லிகையை...

மகத்துவம்
அறியாமல்...

பாலீதீன் பையில்
கசக்கித்
தருகையில்

வலிக்கிறது மனது!

No comments: