Friday, May 28, 2010

களத்து மேடு



காசுக்குப் பதில்
நெல்லைக் கொடுத்து விட்டு
அம்மா வாங்கித் தந்த
கருப்பட்டித் தோசையும்

"கார் கார' அம்மாயி
சுட்டுக் கொடுத்த இட்டிலியும்
அதற்கு தொட்டுக்கொள்ள
செம்பழுப்பு நிறச் சட்டினியும்

நெல் மணிகளைத்
தூற்றும்போது
மனதுக்குள்
ஒட்டிக் கொள்கிற
உற்சாகமும்...

கூட்டம் கூட்டமாய்
அசராது உழைத்த
அத்தனை
முகங்களும்...

நினைவுத் தடங்கள்
நெஞ்சுக்குள்ளே
சிறகடிக்கிறது...

கொஞ்சம் கொஞ்சமாய்
காணாமல் போய்க் கொண்டிருக்கும்
களத்து மேட்டை
கடந்து செல்கையில்...

2 comments:

எல் கே said...

nice one :)

சுப்பு said...

நல்லா இருக்கு