Wednesday, June 30, 2010

''மங்கை சூதகமானால்...

பெட்ரோல், டீசல் உயர்வால் ஏழைகளுக்கு அதிக பாதிப்பு இல்லை என்றும் இந்திய மக்கள் புத்திசாலிகள் இந்த விலை ஏற்றத்தை ஏற்றுக் கொள்வார்கள் எனவும் இந்தியப் பொருளாதார மேதையும் பாரதப் பிரதமருமான டாக்டர் மன்மோகன்சிங் ஜி.20 மாநாட்டில் விமானத்தில் பறந்து விட்டு டெல்லி வீதிகளில் உயர்ரக காரில் பறப்பதற்கு முன் செய்தியாளர்களிடம் இந்தத் தகவலை பகிர்ந்த செய்தி இன்றைய தினத்தந்தியில் வெளியானது.

இதேபோல கோவையில் நமது முதல்வரும் ஒரு தகவலைச் சொல்லியிருந்தார். அதாவது இன்னும் அதிகமாக உயர்த்தப்படும் என்று நினைத்திருந்தேன். பரவாயில்லை. தாங்கிக் கொள்வார்கள் நமது மக்கள் என்ற ரீதியில்.

எனக்கு இந்நேரத்தில் தெய்வீகத் திருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் பொன்மொழி ஒன்று நினைவுக்கு வருகிறது...

''மங்கை சூதகமானால்
கங்கையிலே மூழ்குவது;
கங்கையே சூதகமானால்
எங்கே போய் மூழ்குவது''

1 comment:

குடந்தை அன்புமணி said...

இவங்களையெல்லாம்...