Tuesday, June 29, 2010

கந்தகத்தினால் மட்டுமல்ல...

தீக்குச்சி எரிகிறது
கூடவே என் மனதும்...

பெட்டிக்குள் அடைபடும்
தீக்குச்சிகளைப் போலவே
நாங்களும்
அடைபடுகிறோம்...

குச்சிகளாய் சிதறுவதில்
குதுகலம் இருப்பினும்
எங்களை அடைத்து வைப்பதில்தான்
ஆனந்தம் காண்பார்கள் முதலாளிகள்...

மாலை நேரமே
மனதுக்குச் சந்தோஷம்...

இல்லம் திரும்பும் பேருந்தே
எங்களின் 
புஷ்பக விமானம்...

வீட்டில்
எரியும் நெருப்பில்
எங்கள் முகமும்
எங்களுக்கே தெரியும்...

ஒரு நிமிடம்

தீக்குச்சி எரிவது
கந்தகத்தினால் மட்டுமல்ல...
எங்களின் கண்ணீராலும்...

No comments: